பத்திரிக்கை செய்தி
தேதி : 01.04.2026
தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களுக்கு தனது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், தமிழ்வேள், செம்மொழி காவலர், முத்தமிழறிஞர் மற்றும் சமூக நீதி சின்னமாக திகழ்ந்த டாக்டர் கலைஞர் அவர்களின் உயரிய கொள்கைகளை முன்னெடுத்து, தற்போதைய தலைமையின் கீழ் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டப்பட்டுள்ளது.
மேலும், வரும் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, திமுக ஏழாவது முறையாக உறுதியான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மனமார்ந்த விருப்பமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் ஆதரவுடன், தற்போதைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் நலன், சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய சாதனைகளை படைப்பார் என்ற நம்பிக்கையும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை, துவக்கம் முதல் இன்று வரை எந்த சமரசமும் இன்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அதே உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செயல்படும் எனவும் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.
Trending
- திருவண்ணாமலையில் FAIRA ஆலோசனை கூட்டம்: “விரைவான அனுமதி – எளிமையான பதிவு” உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தல்!
- முதல் இன்னிங்ஸில் இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட்: 178 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அபாரம்!
- காவல் நிலையத்தில் கணவர் உயிரிழந்த வழக்கு: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
- பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: X தளத்தில் நெகிழ்ச்சிப் பதிவு
- 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச காப்பீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
- பேரவையில் திமுகவினர் கூச்சல்: எந்தக் கட்சியையும் பேசவில்லையே, ஏன் எழுகிறீர்கள்?” – அமைச்சர் என்.ஆனந்த் கேள்வி!
- கடந்த ஆட்சியில் போதைப்பொருள் அதிகரித்ததால் தான் மக்கள் வீட்டிற்கு அனுப்பினார்கள்”: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
- “20 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கச் சிறப்புத் திட்டம்”: அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!

