ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்; 489 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள முடிவுகளின்படி, கடந்த ஆண்டை விட (95.03%) இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியத் புள்ளிவிவரங்கள்:
- பாலின வாரியாகத் தேர்ச்சி:
- மாணவிகள்: 97.00%
- மாணவர்கள்: 93.19%
- (மாணவர்களை விட மாணவிகள் 3.81% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்).
- மாவட்ட வாரியாக முதலிடம்:
- ஈரோடு – 98.87%
- சிவகங்கை – 98.05%
- கன்னியாகுமரி – 97.63%
- நூறுக்கு நூறு (Centum) எடுத்தவர்கள்:
- கணிதம் – 732 பேர்
- வேதியியல் – 632 பேர்
- உயிரியல் – 784 பேர்
- தமிழ் – 83 பேர்
- அரசுப் பள்ளிகள்: தமிழகம் முழுவதும் 489 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளன.


