சென்னை: சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் (Chess) பங்கேற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வரும் செஸ் வீராங்கனை வைஷாலிக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

செஸ் போட்டிகளுக்கான பயிற்சி, பயணச் செலவுகள் மற்றும் சர்வதேச தொடர்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை (Cheque) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாக வைஷாலியிடம் வழங்கினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து: நிதியுதவியை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் உலகமே வியக்கும் வண்ணம் நம் மாநில வீரர்கள் ஜொலிப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. வீராங்கனை வைஷாலி வரவிருக்கும் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும்” எனத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அரசின் இந்த நிதியுதவிக்கு, வீராங்கனை வைஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version