சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது மகனும் நடிகருமான பிரபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “வரும் 2028-ஆம் ஆண்டு எனது தந்தையாரின் நூற்றாண்டு விழா வரவுள்ளது. அந்த விழாவை முதலமைச்சராக இருந்து நானே முன்நின்று நடத்துகிறேன் என விஜய் தெரிவித்துள்ளார். அந்த பொன்னான நாளுக்காக நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
நடிகர் திலகத்தின் நினைவு நாளில், நடிகர் பிரபு பகிர்ந்த இந்தத் தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

