பத்திரிக்கை செய்தி
தேதி : 01.04.2026
தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களுக்கு தனது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், தமிழ்வேள், செம்மொழி காவலர், முத்தமிழறிஞர் மற்றும் சமூக நீதி சின்னமாக திகழ்ந்த டாக்டர் கலைஞர் அவர்களின் உயரிய கொள்கைகளை முன்னெடுத்து, தற்போதைய தலைமையின் கீழ் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டப்பட்டுள்ளது.
மேலும், வரும் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, திமுக ஏழாவது முறையாக உறுதியான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மனமார்ந்த விருப்பமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் ஆதரவுடன், தற்போதைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் நலன், சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய சாதனைகளை படைப்பார் என்ற நம்பிக்கையும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை, துவக்கம் முதல் இன்று வரை எந்த சமரசமும் இன்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அதே உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செயல்படும் எனவும் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.
Trending
- 2026 ஐபிஎல்: முதல் வெற்றியை பெறப்போவது யார்?அணிகளின் திறன், நிலைமைகள் தீர்மானிக்கும் முடிவு
- 186 இளம் பேச்சாளர்கள் களத்தில் – பரப்புரை வேகம் பெறுகிறதுதிராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல புதிய திட்டம்
- விளாத்திகுளம் மாணவி வழக்கு – நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்கடுமையான தண்டனை, இழப்பீடு, காவல் கண்காணிப்பு குறித்து வழிகாட்டுதல்
- சென்னைவாசிகளே உஷார்! 1,000-க்கும் மேற்பட்ட காகங்கள் பலி: பறவைக் காய்ச்சல் ஊடுருவல் உறுதி!
- “முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் கியாஸ் தட்டுப்பாடு குறைந்திருக்கும்” – விஜய்திருச்சியில் மாநில அரசை விமர்சித்த தவெக தலைவர்
- 50 ஆண்டுகளுக்கு பின் நிலவை நோக்கி மனித பயணம்Artemis 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
- பெட்ரோ கெமிக்கல்களுக்கு இறக்குமதி வரி ரத்துமத்திய கிழக்கு போரின் தாக்கத்தை சமாளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை
- நமக்கே பாதுகாப்பு இல்லைனா சாதாரண பெண்கள் நிலை என்ன?” – AI போலி படங்கள் குறித்து கிருத்தி ஷெட்டி ஆவேசம்!

