சென்னை: தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு அதிரடி மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, விளிம்பு நிலை மாணவர்களின் உயர்கல்விக்காக முக்கிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
- கல்வி உதவித் தொகை உயர்வு: அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ரூ.131 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சர்ப்ரைஸ்: இவ்வாண்டு பட்ஜெட்டில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

