நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பலத்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய வீரருக்கு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ள இந்த வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகவும், சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நார்வே செஸ் (Norway Chess) போட்டியில் ஆர். பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சென்னை மாநகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சதுரங்க விளையாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்து வருவதாகவும், எதிர்கால போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மேலும் பல சாதனைகள் படைப்பார்கள் என்ற நம்பிக்கையையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறுவரந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட திராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026

