தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கைச் செய்திகள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தங்குவதற்குத் தனக்கெனத் தனி வீடு இல்லை என்றும், தற்போது சென்னையில் வீடின்றித் தவித்து வருவதாகவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது, நடிகர் விஜய் தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பதாகக் கூறப்படும் தகவல் தீயாய்ப் பரவி வருகிறது. நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில், தங்குவதற்கு இடமின்றித் தவிப்பதாக எழுந்துள்ள இந்த விவகாரம், விஜய் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இது தொடர்பாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்த ‘வீடு மறுப்பு’ விவகாரம் சர்ச்சையை மேலும் சூடாக்கியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளா என்பது குறித்து இதுவரை நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அவரது வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வரும் வேளையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இத்தகைய செய்திகள் அவரது அரசியல் பயணத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version