சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 1) பகல் 1 மணியளவில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், உதவியாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்றும் அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘படிவம் 17சி’-யை உடனடியாகத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பூத் ஏஜெண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version