சென்னை:

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையின் ‘ஆய்வு முடிவு 1’ விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமை ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்திருப்பதுடன், பிற மாநிலங்களை விட தமிழகத்தின் கடன் போக்கு மிக அதிக அளவில் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிர வைக்கும் ஆய்வு முடிவுகளின் முக்கியப் புள்ளிகள்:

  • 5 ஆண்டுகளில் இருமடங்கான கடன்: கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமாக 14.3% அதிகரித்து, தற்போது 2025-26 ஆம் ஆண்டில் 10.00 லட்சம் கோடி ரூபாயாக (முதன்நிலைக் கணக்குகள்) அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
  • தனிநபர் மீதான கடன் ₹1,28,934: கடந்த 2020-21 இல் 67,087 ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன், கடந்த 5 ஆண்டுகளில் 92 விழுக்காடு (92%) அசுர வளர்ச்சியைக் கண்டு, தற்போது 2025-26 ஆம் ஆண்டில் 1,28,934 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.
  • முதல் 60 ஆண்டுகளை மிஞ்சிய 5 ஆண்டுகள்: கடந்த 2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 4.87 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டு காலக் கடனானது, மாநிலம் தனது முதல் அறுபது ஆண்டு காலத்தில் திரட்டிய மொத்த கடனை விட மிக அதிகமாகும்.
  • முதலீட்டிற்காக அல்ல… அன்றாடச் செலவுக்காகக் கடன்: மூலதனச் செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.3% ஆக மட்டுமே உள்ள நிலையில், கடன் வளர்ச்சி விகிதம் 14.3% ஆக உள்ளது. இது ஏதேனும் புதிய முதலீடு செய்வதற்காக இல்லாமல், அன்றாடச் செலவுகளுக்காகவே கடன் பெறப்படுவதைக் குறிக்கிறது.
  • மாநிலங்களுடன் ஒப்பீடு – தமிழகம் மிக அதிக அளவு: மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதத்தை (2025-26 திருத்தப்பட்ட மதிப்பீடு) பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது:
    • குஜராத்: 17.6% (சீரானது)
    • மகாராஷ்டிரா: 19.7% (நிலைத்துள்ளது)
    • கர்நாடகா: 23.4% (குறைந்து வருகிறது)
    • தமிழ்நாடு: 28.3% (மிக அதிக அளவு)

மக்களே… தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ₹1.28 லட்சமாக உயர்ந்திருப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? 👇

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெறப்பட்ட கடன், அதற்கு முந்தைய 60 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்த கடனை விட அதிகம் என்ற தகவல் மற்றும் அன்றாடச் செலவுக்காகக் கடன் வாங்கப்படும் நிலை பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க? தமிழகத்தின் இந்த அசுர கடன் வளர்ச்சியைத் தடுத்து, நிதி நிலையைச் சீராக்க அரசு என்ன செய்ய வேண்டும்? உங்களின் அதிரடியான கமெண்டுகளை கீழே தட்டி விடுங்க! அப்படியே உங்க பிரண்ட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு இந்த முக்கியத் தரவுகளை உடனே ஷேர் பண்ணுங்க!

Share.
Leave A Reply

Exit mobile version