சென்னை:

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த முக்கியச் சந்திப்பின் போது, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களுடன் விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார் மற்றும் விசிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். சிந்தனைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை, விசிக-வின் முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது தமிழகத்தின் நடப்புச் சூழல்கள், சமூக நீதித் திட்டங்கள் மற்றும் தொகுதி சார்ந்த மக்கள் நலப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையேயான இந்தச் சந்திப்பு, தற்போதைய அரசியல் சூழலில் புதிய விவாதங்களையும், அரசியல் கணக்குகளையும் கூட்டியுள்ளது. சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ள தலைவர்கள், இதன் பின்னணி மற்றும் விவாதிக்கப்பட்ட விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version