அங்கம்பாளையம் பகுதியில் சம்பவம்
பூஜை அறை பொருட்கள், சிலிண்டர் எரிந்து சேதம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் அங்கம்பாளையம் பகுதியில், பூட்டியிருந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் எப்படி நடந்தது?
சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர் (53), வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு சென்றிருந்தார். மதியம் அவரது வீட்டிலிருந்து புகை எழுந்ததை அக்கம் பக்கத்தினர் கவனித்து உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
தீ அணைப்பு நடவடிக்கை
அருகிலிருந்தவர்கள் முதலில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கோபி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
சேதம் மற்றும் விசாரணை
இந்த விபத்தில், பூஜை அறையில் இருந்த மின்சாதனங்கள் மற்றும் காலி சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

