காய்ச்சல், வாந்தி, வலிப்பு அறிகுறிகள்
உதய்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ராஜஸ்தான் மாநிலம் சலும்பர் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக கடந்த 5 நாட்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிகுறிகள் தீவிரம்
கட்டா மற்றும் லால்புரா கிராமங்களில் குழந்தைகள் காய்ச்சல், வாந்தி, வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் லேசான காய்ச்சலாக இருந்தாலும், பின்னர் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

20 பேர் தீவிர சிகிச்சை
20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உதய்பூரில் உள்ள மகாராணா பூபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் கண்டறியும் முயற்சி
உயிரிழந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. நோய்க்கான சரியான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம், அப்பகுதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version