சென்னை தலைமைச் செயலகத்தில் 6.8.2026 அன்று ஒரு முக்கிய மரியாதை நிமித்தமான சந்திப்பு நிகழ்ந்தது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பிற்கான நியமன ஆணையைப் பகிர்ந்துகொண்ட திரு. ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள், தனது மக்கள் பணிகளைச் செம்மையாகத் தொடங்குவதற்கு முதலமைச்சரிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்த புதிய தலைமைப் பொறுப்பு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது மக்களே!

Share.
Leave A Reply

Exit mobile version