வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தாரிக் ரஹ்மான் ஜூன் 21-22 தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார், மேலும் ஜூன் 23 முதல் சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.
பிப்ரவரி மாதமே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லிக்கு வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், ரஹ்மான் மலேசியா மற்றும் சீனாவுக்கு செல்லும் பயணத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
தாரிக் ரஹ்மான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, தங்கள் அரசாங்கம் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் என்று அவரது கட்சி கூறி வந்தது.
பயணத் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டதை ஒரு நேரடி செய்தியாகக் கருதுவது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் என்றாலும், இது ஒரு ராஜீய சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
முக்கிய ஒப்பந்தங்கள்
மலேசியாவில் சுமார் 8,00,000 வங்கதேசத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இது அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் சக்தியில் தோராயமாக 37 சதவிகிதமாகும்.
வங்கதேச தொழிலாளர்கள் முக்கியமாக உற்பத்தி, கட்டுமானம், தோட்டப்பயிர் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பணிபுரிகின்றனர்.
சீனாவின் லட்சியத் திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் வங்கதேசம் இணைந்துள்ளது.


