இந்திய பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசராபானியை தனது அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேச இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவித்த நிலையில், அவருக்கு மாற்றாக முசராபானி சேர்க்கப்பட்டுள்ளார்.
உயரமான உடல் அமைப்பும் வேகமான பந்துவீச்சும் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்துள்ள முசராபானி, பல லீக் தொடர்களிலும் விளையாடி அனுபவம் பெற்றுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) இஸ்லமாபாத் அணியுடன் இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, தற்போது கேகேஆர் அணியில் இணைந்துள்ளார்.
இந்த சேர்க்கை கொல்கத்தா அணியின் பந்துவீச்சு வரிசையை மேலும் வலுப்படுத்தும் என அணியின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் முசராபானியின் வேகமும் உயரமும் எதிரணிக்கு சவாலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


