மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தென் தமிழ்நாட்டில் விமான சேவை வசதிகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை விமான நிலையம் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் சில சர்வதேச சேவைகளுக்கு முக்கிய மையமாக இருந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டதால் புதிய விமான சேவைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நடவடிக்கை மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் பயணிகளுக்கும் பயண வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share.
Leave A Reply

Exit mobile version