பேட்டிங் மைதானங்களா? அல்லது பந்துவீச்சாளர்களின் கல்லறைகளா? அதிர வைக்கும் ஐபிஎல் புள்ளிவிவரம்!

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 முதல் 2023 வரை (16 ஆண்டுகள்) ஒட்டுமொத்தமாக 133 முறை மட்டுமே அணிகள் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் (2024, 2025 மற்றும் நடப்பு 2026 சீசனின் தொடக்கம் வரை) மட்டும் 134 முறை 200+ ரன்கள் கடக்கப்பட்டுள்ளன. அதாவது 16 ஆண்டுகளில் நடந்த சாதனை, வெறும் 3 ஆண்டுகளில் முறியடிக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் பிளேயர் (Impact Player) விதிமுறை, பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்கள் மற்றும் சிறிய எல்லைக்கோடுகள் (Boundary) போன்ற காரணங்களால் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இது கிரிக்கெட்டின் சமநிலையைப் பாதிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

ஏன் இந்த அதிரடி மாற்றம்? – 3 முக்கிய காரணங்கள்:

  • இம்பாக்ட் பிளேயர் விதிமுறை: 8-வது விக்கெட் வரை அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால், தொடக்கத்திலிருந்தே வீரர்கள் அச்சமின்றிப் பவுண்டரிகளை விளாசுகின்றனர்.
  • பேட்ஸ்மேன்களின் மனநிலை: இப்போது 200 ரன்கள் என்பது பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்ற எண்ணம் வீரர்களிடம் வந்துவிட்டது. நேற்று மும்பை இந்தியன்ஸ் 221 ரன்களை எளிதாகச் சேஸ் செய்ததே இதற்குச் சான்று.
  • நவீன பேட்கள் (Bats): நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேட்கள், பந்து லேசாகப் பட்டாலே சிக்ஸருக்குப் பறக்க உதவுகின்றன.
Share.
Leave A Reply

Exit mobile version