தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை (PWD) மானியக் கோரிக்கை 2026-27-இல் அறிவிக்கப்பட்டுள்ள 3 முக்கிய சிறப்பம்சங்கள்:
📌 முக்கிய அறிவிப்புகள்:
🏙️ நகர்ப்புறங்களில் உலகத் தரமான பன்னடுக்கு அரசு கட்டடங்கள்:
இனிவரும் காலங்களில் நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும், ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019’ (TNCDB Rules, 2019) படி அனுமதிக்கத்தக்க அதிகபட்ச Premium FSI-ஐ முழுமையாகப் பயன்படுத்தி அமைக்கப்படும்.
பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, எழில்மிகு மற்றும் உலகத் தரத்திலான பன்னடுக்கு அரசு கட்டடங்களாக மாற்றப்படும்.

👷♂️ பொறியியல் பட்டதாரிகளுக்குப் புதிய வாய்ப்பு:
ரூ. 1 கோடி வரை திட்ட மதிப்பீடு கொண்ட பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களில், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த வேலையற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு (Unemployed Engineering Graduates) சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
🏗️ ரூ. 1 கோடி தொகுப்பு நிதியில் புதிய கட்டுமானக் கழகம்:
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (Tamil Nadu Infrastructure and Construction Corporation) நிறுவப்படும்.
செயல்பாடுகள்:
₹200 கோடிக்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்வது.
பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குவது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்கு கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்பது.