ஈரோட்டில் தேர்தல் உற்சாக பேச்சு
NEET, CAA உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விமர்சனம்

ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், “தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்” என்று கூறி உற்சாகத்தை தூண்டியுள்ளனர். தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்களின் கூட்டணியே என்டிஏ எனவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

என்டிஏ மீது குற்றச்சாட்டு
பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ச்சி அடையவில்லை என்பதே அவர்களின் சாதனை எனவும், NEET, CAA, NEP, கீழடி, கோவை-மதுரை மெட்ரோ திட்ட மறுப்பு, வரிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழகத்திற்கு அநீதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

திராவிட மாடல் சாதனைகள் முன்னிலை
இதற்கு மாறாக, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. ‘DMK Manifesto 2026’ அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது

Share.
Leave A Reply

Exit mobile version