ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக சீன அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.84 கோடி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. மருத்துவ உதவி, உணவு மற்றும் பிற அவசர உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

