சென்னை: திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான திரு. மல்லை சத்யா அவர்கள், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து சந்தித்துப் பேசினார்.

அன்பான அழைப்பை ஏற்று வருகை தந்த திரு. மல்லை சத்யா அவர்களுக்கு, டாக்டர் ஆ. ஹென்றி சால்வை அணிவித்து, மனமார்ந்த வரவேற்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நீண்டகால அரசியல் அனுபவமும், பொது விவகாரங்களில் துணிச்சலான கருத்துகளையும் கொண்ட திரு. மல்லை சத்யா, தற்போது திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பாகப் பல்வேறு முக்கிய அரசியல் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்:

பரஸ்பர அன்பு மற்றும் நட்புறவோடு நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய சமூகப் பிரச்சினைகள், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள், மாநில மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், சமூக முன்னேற்றம், இளைஞர்களின் பங்கு மற்றும் நல்லாட்சிக்கான சிந்தனைகள் குறித்தும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மனிதநேயமே உயர்ந்தது:

“கருத்து வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம், நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நலன் ஆகியவைதான் மிக உயர்ந்தவை என்பதை இந்த சந்திப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது. மக்கள் நலனை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும், மனநிறைவை அளிப்பதாகவும் அமைந்தது” என டாக்டர் ஆ. ஹென்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நேரம் ஒதுக்கி, பாசமிகு சந்திப்பை நிகழ்த்திய அண்ணன் திரு. மல்லை சத்யா அவர்களுக்கு டாக்டர் ஆ. ஹென்றி தனது மனமார்ந்த நன்றியையும், மரியாதையையும் சமர்ப்பித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version