Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு மேலும் 15 நாட்களுக்கு அதிரடி நீட்டிப்பு! ஜூலை 15 வரை சலுகை வழங்கி மத்திய அரசு உத்தரவு!
- இந்தியாவின் அடுத்த தலைமுறை திறமையாளர்களைக் கண்டறியும் ‘இந்தியா ஸ்கில்ஸ் 2026-27’ (IndiaSkills Competition) போட்டித் துவக்கம்! மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!
- மொபைல் டவர் அமைப்பதாகக் கூறி பண மோசடி! பொதுமக்கள் ஏமாற வேண்டாம் – மத்திய தகவல் தொடர்புத் துறை (DoT) எச்சரிக்கை!
- கிராம சபா கூட்டங்களில் மக்கள் பங்கேற்பு ஏன் குறைவு? புதுடெல்லியில் தேசிய ஆய்வு அறிக்கை வெளியீடு – நிதி ஆயோக் (NITI Aayog) முக்கிய வழிகாட்டுதல்!
- தேசத்தை இணைத்த ‘யுவ சங்கம்’ 6-வது கட்டம் நிறைவு! 22 பயணங்கள் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை நேரில் உணர்ந்த 1,100-க்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர்!
- தென் கிழக்கு ஆசியாவில் இந்திய கடற்படையின் பலம்! தாய்லாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு புறப்பட்ட 3 பிரம்மாண்ட போர்க்கப்பல்கள்!
- தொழிலாளர்களுக்கு உயர்தர மருத்துவச் சேவை! இஎஸ்ஐசி (ESIC) 198-வது கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எடுத்த அதிரடி முடிவுகள்!
- கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன் உலகத்துல !! உலக அரங்கில் இந்தியச் சுற்றுலாத் துறை! கூகுள் இந்தியா நிறுவனத்துடன் மத்திய அரசு மெகா ஒப்பந்தம் – டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தப் போகும் கலாச்சாரத் தலங்கள்!
Author: globaleye24x7.com
ROAR 26 நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), குஜராத் டைட்டன்ஸ் (GT), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நன்றி தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக முன்னாள் வீரர்களாக விளையாடிய டுவைன் பிராவோ, மேத்யூ ஹெய்டன், பார்த்தீவ் பட்டேல், முத்தையா முரளிதரன் ஆகியோர் தற்போது பிற அணிகளில் பயிற்சியாளர்களாக உள்ளனர். இவர்களை ROAR 26 நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கியதற்காக இந்த அணிகளின் ஒத்துழைப்பை CSK பாராட்டியுள்ளது. இந்த நிகழ்வை ரசிகர்களுக்கு சிறப்பாக கொண்டுசெல்ல அணிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் (த.வா.க) தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து தங்களது கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம், தமிழக அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல் கட்சியாக த.வா.க மாறியுள்ளது. இந்த அறிவிப்புடன், வேல்முருகன் கடும் அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்தார். “இனிதான் ஆட்டமே இருக்கிறது! கடந்த 5 ஆண்டுகளில் எந்த அமைச்சர்கள், எந்த துறை செயலாளர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது பற்றிய முழு விவரங்களும் என்னிடம் உள்ளது. அனைத்தையும் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு கணிப்புகள் எழுந்துள்ளன.
இன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார் (ரோகிணி நட்சத்திரம்). இன்று திங்கட்கிழமை மற்றும் சுக்ல பட்ச பஞ்சமி திதி இணைந்து வருவதால், சிவபெருமான் வழிபாடு மற்றும் சந்திர தரிசனம் செய்வது மன அமைதியையும், கவலைகளிலிருந்து விடுதலையையும் தரும். ராசிபலன் சுருக்கம்மேஷம்தனவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.ரிஷபம்ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த காரியங்கள் இன்று முடியும்.மிதுனம்சுப விரயங்கள் ஏற்படும் நாள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு; நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.கடகம்லாபகரமான நாள்! மூத்த சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் முதலீடுகள் பலன் தரும்.சிம்மம்உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்; கௌரவம் உயரும்.கன்னிபாக்கியங்கள் கூடும் நாள். ஆன்மீகப் பயணங்கள் மனதிற்கு அமைதி தரும்; தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டு.துலாம்சந்திராஷ்டமம் தொடங்குவதால் பேச்சில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.விருச்சிகம்வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமை…
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் துரித நீதிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பிரதீபா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி கனவுடன் வாழ்ந்த இளம் மாணவியின் உயிரிழப்பு குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத துயரமாகும்.இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையில் குற்றச்சாட்டுக்குரிய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தடய அறிவியல் ஆய்வுகள், உடற்கூறு அறிக்கைகள், சாட்சியங்களின் பதிவுகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான கடுமையான…
ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் (Natanz) மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் இதுவரை எந்த அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், இத்தகைய தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறியதாக கூறி கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், உலக நாடுகள் நிலைமையை கவனத்துடன் கண்காணித்து வருகின்றன.
வேலைவாய்ப்பு உலகில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் ஊழியர்களை குறைத்து, முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுக்கு மாற 10-ல் 9 நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று சமீப ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. செலவு குறைப்பு, வேகமான செயல்திறன், 24/7 பணிச்சூழல் போன்ற காரணங்களால் நிறுவனங்கள் AI-க்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. குறிப்பாக தரவு பகுப்பாய்வு, வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்க உருவாக்கம் போன்ற துறைகளில் மனிதர்களுக்கு பதிலாக AI பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளில் மாற்றங்கள் உருவாகும் என்பதோடு, புதிய திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், மனித வேலைவாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தமிழக பள்ளிக் கல்வி இயக்ககம், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16 வரை தேர்வுகள் நடைபெறும். 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16 வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடையவுள்ளதால், மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுகளுக்கான தயாரிப்பை முன்னதாகவே மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான பதற்றம் உலக நிதிச் சந்தைகளில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்க பங்குச்சந்தையில் சுமார் ரூ.282 லட்சம் கோடி மதிப்பிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய குறியீட்டான S&P 500 சுமார் 5.83% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் மட்டும் ஏற்பட்ட சரிவால் சந்தை மதிப்பில் ரூ.94 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போர் சூழ்நிலை காரணமாக முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்து பங்குகளை விற்று வெளியேறியதுதான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், உலக பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தங்களிடம் கையிருப்பு இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அந்த சலுகையை ஈரான் நிராகரித்துள்ளது. இந்த முடிவு உலகளாவிய எரிசக்தி சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. எண்ணெய் விநியோகம் குறையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தையில் விலை உயர்வு தொடரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை, பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.330 வரை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,620 அளவில் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு நிலைமைகளின் தாக்கம் காரணமாக தங்க விலையில் இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமண மற்றும் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை சரிவு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது
