AI Impact மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பில் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு, இந்தியாவில் டெக்னாலஜி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


