ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குஜராத் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த Mayuree Naree என்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் கவலைக்கிடமானவை என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்தபோது கப்பலில் இருந்த மாலுமிகளில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், கப்பலின் என்ஜின் அறையில் சிக்கியிருந்த மூன்று மாலுமிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச கடல் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.
கடலில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்துக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

