மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘தோழர்’ நல்லகண்ணுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆழ்ந்த அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கலைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் துயர உணர்வு தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பு
ரஜினிகாந்த், நல்லகண்ணுவின் மறைவுக்கு தனது இரங்கலை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
“மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.”
என்றார் ரஜினிகாந்த், அவரின் கொள்கை உறுதியும், சமூகநீதி பணிகளும் அனைவருக்கும் ஊக்கமாகும் எனும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நல்லகண்ணு தனது முழு வாழ்நாளையும் சமூக நீதி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமை பேச்சுக்காக அர்ப்பணித்தார். அவரது மறைவு தமிழக அரசியல் களத்திலும் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது

