பத்திரிக்கை செய்தி
தேதி : 01.04.2026
தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களுக்கு தனது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், தமிழ்வேள், செம்மொழி காவலர், முத்தமிழறிஞர் மற்றும் சமூக நீதி சின்னமாக திகழ்ந்த டாக்டர் கலைஞர் அவர்களின் உயரிய கொள்கைகளை முன்னெடுத்து, தற்போதைய தலைமையின் கீழ் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டப்பட்டுள்ளது.
மேலும், வரும் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, திமுக ஏழாவது முறையாக உறுதியான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மனமார்ந்த விருப்பமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் ஆதரவுடன், தற்போதைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் நலன், சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய சாதனைகளை படைப்பார் என்ற நம்பிக்கையும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை, துவக்கம் முதல் இன்று வரை எந்த சமரசமும் இன்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அதே உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செயல்படும் எனவும் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version