சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் (BCCL) நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் இன்று (21.7.2026) தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. சுரிந்தர் சாவ்லா, இயக்குநர் திருமதி சுதா நடராஜன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் திரு. அருண் ராம் மற்றும் வெளியீட்டாளர் திரு. மணிகண்டன் நாயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக அமைந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version