நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா – அடிக்கல் நாட்டினார் முதல்வர்
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நெல்லை, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மினி டைடல் (TIDEL) பூங்காக்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஒவ்வொரு மினி டைடல் பூங்காவும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படவுள்ளது. இதில் தலா 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டு, ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் செயல்பட ஏற்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது. மாவட்ட இளைஞர்கள் தாயகத்திலேயே தொழில்நுட்ப துறையில் முன்னேற இந்த திட்டம் முக்கிய வாய்ப்பாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.
“மாவட்ட வளர்ச்சியே மாநில வளர்ச்சி” என்ற கொள்கையின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இந்த மினி டைடல் பூங்காக்கள் பார்க்கப்படுகின்றன.

