தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (07.09.2026) நடைபெற்ற 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், வழக்கமான அரசியல் பாணியின்றி மிகவும் அதிரடியாகவும் கடுமையாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

📌 சட்டமன்றத்தில் முதலமைச்சரின் அதிரடிப் பேச்சு:

  • 🗣️ “மிசா பார்த்தோம்னு பெருமை பேசாதீங்க”: “எதுக்கெடுத்தாலும் நாங்க ‘மிசா’வை பார்த்தவங்க, ‘மிசா’வை பார்த்தவங்கன்னு சொல்றாங்க! நடந்தது, நடக்கப்போறது எல்லாமே எங்களுக்கு நல்லாவே தெரியும்” என எதிர்க்கட்சிகளின் பழம்பெருமைகளுக்குப் பதிலடி கொடுத்தார்.
  • 👥 “மக்களுக்குத் தெரியாத அரசியல் இல்லை”: மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், விழிப்புணர்வோடு இருக்கும் மக்களுக்கு முன்னால் தம்மால் இவர்களின் அரசியலைப் பற்றிப் புதிதாகக் கருத்துச் சொல்லிவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
  • 🛑 பெண்கள் பாதுகாப்பு & கடுமையான சட்டம்: “பெண்களைப் பற்றி இரட்டை அல்லது முட்டைப் பொருள் தொனிக்கும் வகையில் (Double/Triple meaning) இழிவாகப் பேசினால், சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும்” என எச்சரித்தார்.
  • 💥 அரசியல் விமர்சனங்கள்: எதிர்க்கட்சியினரின் ஊழல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்துத் தனது உரையில் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்தார்.
  • 🎭 அந்நியன் அவதாரம்: சட்டப்பேரவையில் சில நேரங்களில் அமைதியான ‘அம்பி’யாகவும், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பற்றிப் பேசும்போது அதிரடியான ‘அந்நியன்’ அவதாரத்திலும் முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version