டீசல் மீதான வரி முழுமையாக ரத்து: சர்வதேச விலை உயர்விலிருந்து பொதுமக்களைக் காக்க அதிரடி நடவடிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 டாலரைத் நெருங்கியுள்ள நிலையில், இந்தியப் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ₹13-லிருந்து ₹3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது; டீசல் மீதான ₹10 வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு ‘பூஜ்ஜியம்’ ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் ஈடுகட்டப்படுவதால், நயாரா போன்ற தனியார் பங்குகளில் ஏற்பட்ட விலை உயர்வு மற்ற பொதுத்துறை பங்குகளில் (IOCL, BPCL) ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது, இது போர் சூழலால் விலை உயருமோ என்று அஞ்சிய வாகன ஓட்டிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

முக்கிய விவரங்கள்:

  • வரி மாற்றங்கள்: பெட்ரோல் மீது ₹10 வரியும், டீசல் மீது ₹10 வரியும் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
  • விலை குறையுமா?: இந்த வரி குறைப்பு பெரும்பாலும் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைச் சரிசெய்யவே (OMC losses) பயன்படுத்தப்படும் என்பதால், சில்லறை விற்பனை விலையில் (Pump Price) உடனடி வீழ்ச்சி இருக்காது; ஆனால், விலை உயராமல் தடுக்கப்படும்.
  • காரணம்: ஈரான் – இஸ்ரேல் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளதே இந்த வரி மாற்றத்திற்குக் காரணம்.
Share.
Leave A Reply

Exit mobile version